Wednesday 12 March 2014

நமது பாரம்பரியங்கள்- பூணூல்.



       பூணூல் அணிவதன் மூலமே பிராமணர் தம்மை பிறரிடம் இருந்து வேறுபடுத்தி, உயர்ந்தவர் எனச் சொல்லி மற்றவர்களையும் கூறச் செய்யமுடிகிறது. ஒருவேளை பூணூல் அணியும் வழக்கம் மற்ற குலத்தாருக்கும் இருந்திருந்தால் ? 

       இருந்திருந்தால், தொலைந்து போன ( அல்லது மறுக்கப்பட்ட ) மிகச்சிறந்த பாரம்பரியங்களான கல்வி, பூசை செய்தல், சடங்குகள் நடத்துதல், பிற ஆசாரங்கள், கூடி உணவு உண்ணுதல், கூடி வாழ்தல், தீண்டாமை இல்லா  சமூக அமைப்பு ஆகியவை எல்லா சாதிகளுக்கும் பொதுவானதாக இருந்து இருக்கலாம் என்பதை, கடலில் புதைந்திருக்கும் பனி மலையின் நுனி போல, மறைமுகமாகச் சொல்கிறது.



        பூணூல் என்பது குருவாக இருப்பவர் ஒரு பாலகனைத் தன்னிடம் கல்வி பயில அனுமதிக்கும் சடங்கு. இதன் மூலம் மாணாக்கன் கல்விக்கும் அதைச்சார்ந்த சமூக அங்கீகாரங்களும் ( பூசை செய்தல், பிற சடங்கு நடத்துதல் ) உரியவனாகிறான்.



கி.பி. 1700-ம் ஆணடு.

        வன்னியர், கோனார் ( இடையர் ), பறையர், ஓதுவார், ஆசாரி, செட்டியார், பிள்ளைமார் ( வெள்ளாளர் – பாண்டி, சோழிய மற்றும் பிற ), குருக்கள், மற்றும் பிராமணர்களுக்கும் பொதுவானதாகவே பூணூல் இருந்துள்ளது. ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் உண்மை. எப்படி ?
நீங்கள் எப்போதாவது கல்யாணத்திற்கான மளிகைச்சாமான்கள் எழுதி இருந்தால் ஞாபகம் வரலாம், அதில் பூணூல் முக்கியமானதாக இருக்கும். கல்யாண நாளன்று முக்கிய சடங்காக மாப்பிள்ளைக்கு  பூணூல் போடுவர். அதன் பின்னரே பெண் அழைக்கப்பட்டு, தாலி கட்டும் வைபவம் நடத்துவர்.
         மாப்பிள்ளைக்கு பூணூல் போடுவது மேற்கண்ட எல்லா குலத்தினரின் வழக்கமாகும். 
         எட்வர்ட் தர்ஸ்டன் ( Edward Thurston ) கூற்றுப்படி கீழ்கண்ட குலத்தாருக்கு பூணூல் அணியும் வழக்கம் இருந்துள்ளது.
 
பூணூல் அணிபவரா ?
குலம்
சடங்கு

திருமணம்
சாவு சடங்கு
எல்லா நேரமும்
வன்னியர்
ஆம்
ஆம்

கோனார் -இடையர்

ஆம்

பறையர் ( தங்களர் )
ஆம்
ஆம்

ஓதுவார், குருக்கள்


ஆம்
வெள்ளாளர்*
ஆம்
ஆம்

ஆசாரி*


ஆம்
செட்டியார்*


ஆம்
பிராமணர்


ஆம்
         *சில பிரிவினர் மட்டும், உதாரணமாக பொற்கொல்லர் ( ஆசாரி ).

         இன்னும் சில குலங்களில், மகன்களும் மற்றும் பங்காளிகளும்  சாவு சடங்கின் போது பூணூல் போட்டுக் கொள்கிறார்கள். வீட்டுக்கு வருமுன் அவற்றை கழற்றி எறிந்து விடுகின்றனர்.

         இதிலிருந்து நமக்கு தெரிவது ;; பிராமணர்களுக்கு இணையான உரிமைகளை மற்ற சாதியினரும் பெற்றிருந்தனர்.

அப்படியானால் இது அணிவது விட்டுப்போனது எதனால் ?

   சமண, புத்த மத எழுச்சி மற்றும் அதன் வீழ்ச்சி.
இலங்கை, வடங்கை சண்டைகள்.
தொழில் முறைகள் ( மிகவும் நாசூக்கான தொழில் செய்வோர் மட்டுமே தொடர்ந்து அணிந்து வருகின்றனர் )



No comments:

Post a Comment